விஜய் ஆட்சி அமைப்பதில் நீடித்த இழுபறியால் உடலில் பெட்ரோல் ஊற்றி தீக்குளித்த தவெக நிர்வாகி பலி

நாகர்கோவில்: தமிழ்நாட்டில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் தவெக 108 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்று ஆட்சி அமைக்க முடியாத சூழல் ஏற்பட்டதையடுத்து, தவெக தொண்டர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதனால் மனமுடைந்த திருநெல்வேலி மாவட்டம் தவெக வள்ளியூர் ஒன்றிய தொண்டரணி இணை அமைப்பாளரான இசக்கியப்பன் (43) கடந்த 9ம்தேதி, பழவூர் விஸ்வநாதபுரம் சோதனை சாவடி அருகே தனது உடலில் பெட்ரோல் ஊற்றி தீ வைத்து கொண்டார். அங்கிருந்த போலீசார் மற்றும் பொதுமக்கள் உடனடியாக அவரை மீட்டு நாகர்கோவில் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று அதிகாலை 3 மணியளவில் இசக்கியப்பன் உயிரிழந்தார். இதுதொடர்பாக, பழவூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: