ஆரணி, மார்ச் 1: ஆரணி அடுத்த சென்னாத்தூர் லாடாவரம் கிராமத்தை சேர்ந்தவர் வீரராகவன்(40), இவர் சென்னையில் உள்ள அரசு மதுபானக் கடையில் சேல்ஸ்மேனாக வேலை செய்து வந்தார். இந்நிலையில், அவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு சொந்த ஊருக்கு வந்தார். அப்போது, அவர் வசிக்கும் பகுதியில் சில தினங்களாக ஊராட்சியில் சார்பில் மேல்நிலை நீர் தேக்கத் தொட்டியிலிருந்து பொதுமக்களுக்கு வினியோகம் செய்யும் குடிநீர் சரிவர வராமல் இருந்தது.
இதனால் நேற்று முன்தினம் வீரராகவன், அதே பகுதியில் உள்ள ஊராட்சி மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி பழுப்பில் அடைப்பு ஏதேனும் ஏற்பட்டுள்ளதா என பார்ப்பதற்காக மேல்நிலை நீர்தேக்கத் தொட்டியில் ஏரிப்பார்த்தார். அப்போது திடீரென நிலைதடுமாறி தொட்டியில் இருந்து கீழே விழுந்த படுகாயமடைந்தார்.