நாகர்கோவில், பிப்.26: கலெக்டர் அலுவலகத்தில் குடியேறும் போராட்டம் நடத்திய மாற்றுத்திறனாளிகள் 20 பேரை போலீசார் கைது செய்தனர்.
தெலங்கானா, புதுச்சேரி மாநிலங்களில் வழங்குவது போன்று மாற்றுத் திறனாளிகளின் மாத உதவித் தொகையை R3 ஆயிரமாக உயர்த்தி வழங்க வேண்டும். கடுமையான ஊனமுற்றோருக்கு R5 ஆயிரம் வழங்க வேண்டும். மாற்றுத்திறனாளிகள் உரிமைச் சட்டம் 2016-ன் படி தனியார் துறைகளில் 5 சதவீத பணிகளை மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நாகர்கோவிலில் கலெக்டர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகள் குடியேறும் போராட்டம் நடத்த முயற்சி செய்து வருகின்றனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்து வருகின்றனர்.