விவசாயிகள் கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் செங்கம் அருகே பரபரப்பு 8 வழி பசுமைச்சாலைக்கு எதிர்ப்பு

செங்கம், பிப்.19: செங்கம் அருகே 8 வழிச்சாலைக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் கருப்புக்கொடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.சென்னை முதல் சேலம் வரை 8 வழி பசுமைச்சாலை அமைக்கும் திட்டத்திற்கு திருவண்ணாமலை மாவட்டம் உட்பட 5 மாவட்ட விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், நேற்று திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அடுத்த மண்மலை கிராமத்தில் உள்ள விவசாய நிலத்தில், 8 வழிச்சாலை இயக்க எதிர்ப்பு விவசாயிகள் கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, 8 வழிச்சாலை அமைக்கும் திட்டத்தை விரைவுபடுத்தும் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி, அதற்கு ஆதரவாக செயல்படும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆகியோருக்கு கண்டனம் தெரிவித்தனர். மேலும், 8 வழிச்சாலை திட்டத்தை திரும்ப பெறும் வரையில் தங்களது போராட்டம் தொடரும் என விவசாயிகள் தெரிவித்தனர். விவசாயிகளின் கருப்புக்கொடி ஆர்ப்பாட்டத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories: