கோவை காங்கயம் அருகே பாஜ கட்சி வேட்டிகள் 200 பறிமுதல்

காங்கயம்-சென்னிமலை சாலையில் திட்டுப்பாறையில் கண்காணிப்பு குழுவினர் நேற்று முன்தினம் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோட்டை சேர்ந்த கடுங்கொண்பெருவழுதி (60) என்பவர் ஓட்டிவந்த காரை நிறுத்தி பறக்கும்படை கண்காணிப்பாளர் குழு அலுவலர் ரஞ்சித்ராஜ் தலைமையில் தேர்தல் போலீசார் சோதனை மேற்கொண்டனர். அதில் உரிய ஆவணமின்றி எடுத்தவந்த பாஜ கட்சி கரை போட்ட ரூ.20 ஆயிரம் மதிப்புள்ள 200 வேட்டிகள் இருந்தது. வேட்டிகளை பறிமுதல் செய்து காங்கயம் தேர்தல் நடத்தும் அலுவலர் பாலமுருகன், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் தங்கவேல் ஆகியோரிடம் ஒப்படைந்தனர்.

 

Related Stories: