கல்வியாளர்கள், மாணவர்கள் கோரிக்கை பொன்னமராவதி அருகே வேகுப்பட்டியில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கலந்தாய்வு கூட்டம்

பொன்னமராவதி,பிப்.18: பொன்னமராவதி அருகே வேகுப்பட்டியில் கிராம விழிப்புணர்வு காவல் அலுவலர் மற்றும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. ஊராட்சி தலைவர்அர்ச்சுனன் தலைமை வகித்தார். துணைத் தலைவர்முத்து முன்னிலை வகித்தார். சிறப்பு சப்இன்ஸ்பெக்டர் பெருமாள், கிராம விழிப்புணர்வு காவல் அலுவலர் பேசுகையில், சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பற்றிய தங்கள் பகுதியில் நடக்கும் சட்டவிரோத செயல் பற்றியும், கணவரால் துன்புறுத்தப்படும் பெண்கள், குழந்தைகளுக்கு ஏதேனும் பிரச்னைகள் ஏற்பட்டால் உடனடியாக கிராம காவலர்உதவியை நாடலாம் என்றார்..இதில் வார்டு உறுப்பினர்கள் ,ஊராட்சி செயலர் சங்கர் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

Related Stories: