மக்கள் குறைதீர் கூட்டம்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் கலெக்டர் அலுவலக வளாகத்தில் மக்கள் குறைதீர் நாள் கூட்டம், கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் தலைமையில் நேற்று நடந்தது. இதில் முதியோர், மாற்றுத் திறனாளிகள் உள்பட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 246 மனுக்கள் பெறப்பட்டன. அந்த மனுக்களை பரிசீலனை செய்து, உரிய நடவடிக்கை எடுக்க, சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவிட்டார். மேலும், கடந்த வாரம் நடந்த குறைதீர் கூட்டத்தில் பெறப்பட்ட மனுக்களை பரிசீலித்து ஒரே வாரத்தில் தீர்வு மேற்கொண்டு 5 பேருக்கு முதியோர், மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகை பெறுவதற்கான ஆணைகளை கலெக்டர் வழங்கினார்.

Related Stories: