5 பேர் புதிய அமைச்சர்களாக பதவி ஏற்பு உத்தரகாண்ட் அமைச்சரவை விரிவாக்கம்

டேராடூன்: உத்தரகாண்ட் மாநிலத்தில் புஷ்கர் சிங் தாமி தலைமையிலான அமைச்சரவை 5 அமைச்சர்களுடன் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. உத்தரகாண்ட் மாநிலத்தில் கடந்த 2022ம் ஆண்டு நடந்த சட்டப்பேரவை தேர்தலில் பாஜ இரண்டாம் முறையாக வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்து கொண்டது. இதையடுத்து, புஷ்கர் சிங் தாமி உத்தரகாண்ட் முதல்வராக மீண்டும் பதவி ஏற்றார். அவருடன் 8 பேரவை உறுப்பினர்கள் அமைச்சர்களாக பதவி ஏற்று கொண்டனர். இதில், சமூக நலன் மற்றும் போக்குவரத்து துறை அமைச்சராக பதவி வகித்து வந்த சந்தன் ராம்தாஸ் கடந்த 2023ம் ஆண்டு காலமானார். இதனால் அமைச்சரவையின் பலம் 8ஆக குறைந்தது.

மேலும், உத்தரகாண்ட் மாநில நிதி அமைச்சராக பதவி வகித்து வந்த பிரேம் சந்த் அகர்வால் கடந்த ஆண்டு அமைச்சர் பதவியில் இருந்து விலகினார். இந்நிலையில் புஷ்கர் சிங் தாமி அமைச்சரவையை விரிவாக்கம் செய்துள்ளார்.
அதன்படி, கஜன் தாஸ், பாரத் சிங் சவுத்ரி, மதன் கவுசிக், பிரதீப் பத்ரா மற்றும் ராம் சிங் கைடா ஆகிய உறுப்பினர்கள் நேற்று அமைச்சர்களாக பதவி ஏற்று கொண்டனர். ஆளுநர் குர்மித் சிங் அவர்களுக்கு பதவி பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார். இதன் மூலம் உத்தரகாண்ட் அமைச்சரவையின் பலம் முழுமை பெற்றுள்ளது.

Related Stories: