சென்னை: வெளியுறவுக் கொள்கையிலும் பெயிலியர் மாடல் எனப் பெயரெடுத்துள்ளது ஒன்றிய பாஜ அரசு என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது சமூக வலைத்தளம் பதிவில் கூறியிருப்பதாவது:வெளியுறவுக் கொள்கையிலும் பெயிலியர் மாடல் எனப் பெயரெடுத்துள்ள ஒன்றிய பாஜ அரசின் தவறான முடிவுகளால் கடுமையான சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. தொலைநோக்கு இல்லை, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் இல்லை.
பொதுமக்களுக்குத்தான் இவர்களால் தொல்லை. இதனைக் கண்டித்து, தமிழ்நாடெங்கும் நமது மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியினர் மாபெரும் ஆர்ப்பாட்டங்களை நடத்தியுள்ளனர். களத்தில் தகிக்கும் மக்களின் கோபத்தை உணர்ந்து, ஒன்றிய அரசு உடனடியாக நிலைமையைச் சீர்செய்திட முன்வர வேண்டும். இவ்வாறு பதிவில் கூறப்பட்டுள்ளது.
