ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதற்கு பல நாடுகள் போர் கப்பல் அனுப்பும்: அதிபர் டிரம்ப் பரபரப்பு தகவல்

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் டிரம்ப் நேற்று தனது ட்ரூத் சமூக ஊடக பதிவில் கூறியதாவது: ஈரானின் ராணுவத் திறனை நாங்கள் ஏற்கனவே 100 சதவீதம் அழித்து விட்டோம். இருப்பினும், அவர்கள் எவ்வளவு மோசமாக தோற்கடிக்கப்பட்டிருந்தாலும் ஹார்முஸ் ஜலசந்தியில் ஒன்றிரண்டு ஆளில்லா விமானங்களை அனுப்புவதோ, கடலுக்கு அடியில் கண்ணிவெடி வைப்பதோ, குறுகிய தூர ஏவுகணை ஏவுவதோ அவர்களுக்கு மிகவும் எளிதான காரியம்.
இந்த செயற்கையான தடையால் பாதிக்கப்பட்டுள்ள சீனா, பிரான்ஸ், ஜப்பான், தென் கொரியா, இங்கிலாந்து மற்றும் பிற நாடுகள் இப்பகுதிக்கு தங்கள் கப்பல்களை அனுப்பும் என்று நம்புகிறோம். இதன் மூலம் செயலிழந்த ஈரானால் ஹார்முஸ் ஜலசந்தியின் பாதுகாப்புக்கு இனிமேல் எந்த அச்சுறுத்தலும் இருக்காது. எப்படியாவது ஹார்முஸ் ஜலசந்தியை விரைவில் திறந்த நிலையிலும், பாதுகாப்பானதாகவும் சுதந்திரமானதாகவும் நாங்கள் மாற்றுவோம். இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

Related Stories: