கோவை, பிப். 11: கோவை துடியலூர் அருகே உள்ள தடாகம் பகுதியில் யானைகள் வழிதடம் மற்றும் சட்ட விரோதமாக இயங்கி வரும் செங்கல் சூளைகளை மூட தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த அறிவிப்புக்கு அப்பகுதி சமூக ஆர்வலர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். கோவை துடியலூர் அருகே உள்ள சின்னதடாகம், வீரபாண்டி, சோமையம்பாளையம், நஞ்சுண்டாபுரம், பன்னிமடை உள்ளிட்ட ஐந்து ஊராட்சிகளில் 180க்கும் மேற்பட்ட செங்கல் சூளைகள் இயங்குகின்றன. இவை தமிழக அரசின் விதிமுறைகளுக்கு எதிராக செயல்படுவதாக, சமூக ஆர்வலர்கள் பல ஆண்டுகளாக புகார் தெரிவித்து வருகின்றனர். செங்கல் சூளைகள் காரணமாக அப்பகுதி முழுவதும் மாசு அடைந்துள்ளதாகவும், அதிக அளவு கனிம வளங்கள் கொள்ளை அடிக்கப்பட்டதாகவும் அப்பகுதி மக்கள் புகார் கூறுகின்றனர். மேலும் யானைகள் வழித்தடத்தை ஆக்கிரமித்தும் செங்கல் சூளைகள் இயங்குவதாக குற்றம்சாட்டு உள்ளது.
இது குறித்து சமூக ஆர்வலர் கனேஷ் கூறுகையில், ‘‘கடந்த 2019ம் ஆண்டு தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் மூலம் பல்வேறு மாவட்டங்களில் இருந்து 4 அதிகாரிகள் கொண்ட சிறப்பு குழு அமைக்கப்பட்டு தடாகம் பகுதியில் உள்ள செங்கல் சூளைகள் குறித்து ஆய்வு மேற்கொண்டனர். இது தொடர்பாக ஆய்வறிக்கை கடந்த 2020ம் ஆண்டு ஜனவரி மாதம்