சிலிண்டர்களை சட்டவிரோதமாக பதுக்கிய இருவர் குண்டர் சட்டத்தில் கைது

மதுரை: அலங்காநல்லூர் அருகே சிலிண்டர் தட்டுப்பாட்டை பயன்படுத்தி கூடுதல் விலைக்கு விற்க 398 சிலிண்டர்களை சட்டவிரோதமாக பதுக்கிய இருவர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.
கூடுதல் விலைக்கு விற்க சிலிண்டர்களை பதுக்கி வைத்திருப்பதாக வந்த தகவலின் அடிப்படையில் மதன்குமார் மற்றும் பழனி கைது செய்யப்பட்டனர். சிலிண்டர்களை பதுக்குபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மதுரை ஆட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Related Stories: