சென்னை: சர்வதேச மகளிர் தினத்தையொட்டி சென்னை காமராஜர் சாலையில் உள்ள ஒளவையார் திருவுருவ சிலைக்கு அரசு சார்பில் மரியாதை செய்யப்பட்டது. அமைச்சர் கயல்விழி செல்வராஜ், மேயர் பிரியா, சென்னை மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே, துணை மேயர் மகேஷ் குமார் ஆகியோர் வருகை தந்து மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
