சிறுவனுக்கு பாலியல் தொந்தரவு சென்ட்ரல் மெட்ரோ ரயில் நிலைய செக்யூரிட்டி போக்சோவில் கைது

சென்னை, பிப்.25: சென்னை சென்ட்ரல் மெட்ரோ ரயில் நிலையம் அருகே சிறுவனை மிரட்டி பாலியல் தொந்தரவு கொடுத்த மெட்ரோ ரயில் நிலைய செக்யூரிட்டியை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர். சென்னை சென்ட்ரல் மெட்ரோ ரயில் நிலையத்தில் லுலு மால் கட்டுமான பணிகள் நடந்து வருகிறது. அங்குள்ள தனியார் பாகி ஷாப்பில் பணியாற்றும் தந்தைக்கு, 16 வயது சிறுவன் நேற்று முன்தினம் உணவு அளிக்க வந்துள்ளான். அப்போது அங்கு செக்யூரிட்டியாக பணியாற்றி வரும், கிழக்கு தாம்பரத்தை சேர்ந்த பால் அலெக்சாண்டர் (48) என்பவர், அந்த சிறுவனிடம் பேச்சு கொடுத்து தனியாக அழைத்து சென்று பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். மேலும், இங்கு நடந்த சம்பவத்தை வெளியில் சொன்னால் கொலை செய்து விடுவேன் என்றும் மிரட்டியுள்ளார். இதனால் பயந்து போன சிறுவன் நடந்த சம்பவத்தை தனது தந்தையிடம் கூறி அழுதுள்ளார். உடனே சிறுவனின் தந்தை, வேப்பேரி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்படி போலீசார், செக்யூரிட்டி பால் அலெக்சாண்டர் மீது போக்சோ உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து நேற்று முன்தினம் இரவு கைது செய்தனர்.

Related Stories: