டாக்கா: வங்கதேசத்தில் நடந்த தேர்தலில் வங்கதேச தேசியவாதக் கட்சியின் தலைவர் தாரிக் ரஹ்மான் வெற்றி பெற்று பிரதமரானார். 25 அமைச்சர்கள் மற்றும் 24 இணை அமைச்சர்கள் பதவிப்பிரமாணம் செய்து கொண்டனர். இதனை தொடர்ந்து புதிய நிர்வாகத்திற்கான பாதையை நிர்ணயிப்பதற்கான முதல் அமைச்சரவை கூட்டம் பிரதமர் தாரிக் தலைமையில் நடைபெற்றது. அமைச்சரவை விவாதத்திற்கு பின் செயலாளர்களுடன் பிரதமர் தனியாக சந்தித்து ஆலோசனை நடத்தினார்.
