பெங்களூரு: இந்தாண்டு நடைபெற உள்ள ஐபிஎல் போட்டிகளை நடத்துவதற்கு பெங்களூருவில் உள்ள சின்னசாமி ஸ்டேடியத்துக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கடந்தாண்டு ஐபிஎல் போட்டிகளில் ராயல் சேலஞ்சர்ஸ் அணி சாம்பியன் பட்டம் வென்றதை தொடர்ந்து நடந்த தள்ளுமுள்ளுவில் சிக்கி பலர் உயிரிழந்தனர்.
அதையடுத்து, சின்னசாமி ஸ்டேடியத்தில் போட்டிகள் நடத்த தடை விதிக்கப்பட்டது. அதன்பின் போட்டி நடத்த விதிக்கப்பட்ட பல்வேறு நிபந்தனைகளின்படி மாற்றங்கள் செய்யப்பட்டதை தொடர்ந்து தற்போது அங்கு போட்டி நடத்த அனுமதி தரப்பட்டுள்ளது.
