ஈரோடு, பிப்.4:ஈரோடு அடுத்துள்ள 46புதூர் ஆணைக்கல்பாளையத்தில் எல்ஐசி நகர், தாமரைநகர், லிபர்டி அவென்யூ, சபரி கார்டன், ஆயுதப்படை வளாகம், காவலர் குடியிருப்பு என சுமார் 800 குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்நிலையில், குடியிருப்பு பகுதிகளுக்கு அருகில் டாஸ்மாக் மதுபான கடையை திறக்க மாவட்ட டாஸ்மாக் நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருவதாக கூறப்படுகிறது.