மன்னார்குடி,பிப்.10: மன்னார்குடி நகரத்தில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் புறவழிச் சாலை அமைத்து தர வேண்டும் என்பது பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளின் நீண்டகால கோரிக்கையாக இருந்து வந்தது. இதையடுத்து தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை அமைச்சர் டிஆர்பி ராஜா விடுத்த கோரிக்கையை ஏற்று மன்னார்குடியில் புறவழிச்சாலை அமைக்க தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டார்.
