சென்னை: ராணிப்பேட்டையில் ஜாகுவார் – லேண்ட்ரோவர் கார் உற்பத்தி ஆலையை பிப்.9ம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார். ராணிப்பேட்டையில் டாடா மோட்டார்ஸ் குழுமம் ரூ.9,000 கோடியில் ஜாகுவார் – லேண்ட்ரோவர் ஆலை அமைத்துள்ளது. டாடா கார் ஆலைக்கு 2024ம் ஆண்டு செப்டம்பரில் முதலமைச்சர் அடிக்கல் நாட்டினார்.
