தஞ்சாவூர், பிப் 4: தஞ்சை கோட்ட எல்ஐசி லியாபி முகவர்கள் சங்க செயற்குழு கூட்டம் தஞ்சையில் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு கோட்டத்தலைவர் செல்வகணேசன் தலைமை தாங்கினார். தென்மண்டல துணைத்தலைவர் பாலசுப்பிரமணியன் முன்னிலை வகித்தார். பொதுச்செயலாளர், வேலுச்சாமி வரவேற்றார். கூட்டத்தில் பாலிசிதாரர்கள் சேவையை மேம்படுத்த வேண்டும்,
பாலிசிகளுக்கு ஜிஎஸ்டி நீக்கம் செய்தததற்கு நன்றி தெரிவித்தல், 100 சதவீதம் அன்னிய முதலீட்டை இன்சூரன்சு துறையில் தவிர்க்க வேண்டும், முகவர்களுக்கு நீண்ட கால பென்ஷன் வழங்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் அனைத்து கிளை சங்க நிர்வாகிகள் கருத்துரை வழங்கினார்கள். முடிவில் கோட்ட பொருளாளர் ரஜினிகாந்த் நன்றி கூறினார்.
