ராம்ஜிநகரில் துணிகரம் வீட்டின் ஓட்டை பிரித்து நகை, பணம் கொள்ளை

திருச்சி, ஜன.29: திருச்சி ராம்ஜிநகர் மில்காலனி முத்துமாரியம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் ராமு(63). இவர் கடந்த 3 நாட்களுக்கு முன் வீட்டை பூட்டிவிட்டு உறவினர் வீட்டுக்கு சென்றுவிட்டார். நேற்று முன்தினம் வீட்டுக்கு வந்தபோது வீட்டின் ஓடுகள் பிரிக்கப்பட்டு கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது பீரோவும் உடைக்கப்பட்டு ஒரு பவுன் நகை, ரூ.50 ஆயிரம் ரொக்கம் கொள்ளைபோனது தெரியவந்தது. இது குறித்து ராமு அளித்த புகாரின் பேரில் எடமலைப்பட்டிபுதூர் போலீசார் அங்கு வந்து விசாரணை நடத்தினர். கைரேகைகள் பதிவு செய்யப்பட்டது. மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிந்து கொள்ளையர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

Related Stories: