மதுரை, ஜன. 23: மதுரை, ஆரப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் மகாலட்சுமி(63). இவரது கணவர் கடந்த 4 வருடங்களுக்கு முன்பு உயிரிழந்தார். இதையடுத்து ஆடி, தை அமாவாசை தின்ங்களில் மகாலட்சுமி, தனது கணவருக்காக விரதம் இருந்து தர்ப்பணம் செய்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த தை அமாவாசையை முன்னிட்டு கணவருக்காக விரதம் இருந்து வீட்டில் வழிபாடு நடத்தினார்.
அப்போது சூடம் ஏற்றிய போது அருகில் இருந்த குத்துவிளக்கு தீபத்தில் இருந்து அவரது சேலையில் தீப்பற்றியது. இதில் உடல் கருகிய அவர் மதுரை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து கரிமேடு போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.
