தைப்பூசத்தை முன்னிட்டு சுப்பிரமணியசாமி கோயிலில் சிறப்பு வழிபாடு

பொள்ளாச்சி, ஜன. 29:  பொள்ளாச்சியில் தைப்பூசத்தை முன்னிட்டு கடைவீதி அருகே உள்ள சுப்பிரமணிய சாமி கோயிலில், நேற்று சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் சுப்பிரமணிய சாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. சிறப்பு பூஜையில் ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்து நின்று சுவாமி தரிசனம் செய்தனர். கொரோனா நோய் பரவல் அச்சம் காரணமாக, தைப்பூசத்தை முன்னிட்டு வழக்கமாக முக்கிய வீதிகள் வழியாக நடக்கும் திருவீதி உலா இந்தமுறை ரத்து செய்யப்பட்டது. மாறாக கோயில் வளாகத்திற்குள் கட்டுப்பாடுகளுடன் திருவீதி உலா நடைபெற்றது.

இதேபோல, ஜோதி நகர் விசாலாட்சி அம்மன் கோயில், உடனமர் ஜோதி லிங்கேஸ்வரர் கோயில், உள்ளிட்ட கோயில்களில் உள்ள சுப்பிரமணி சாமி சிலைக்கு சிறப்பு அலங்கார அபிஷேக பூஜைகள் நடைபெற்றது. இதில் சிறப்பு ராஜ அலங்காரத்தில் சுப்பிரமணிய சாமி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

வால்பாறை: வால்பாறை சுப்ரமணியசுவாமி கோவிலில் 16ம் ஆண்டு தைப்பூச திருவிழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. இதையொட்டி வால்பாறை நல்லகாத்து ஆற்றுபாலத்திலிருந்து மேளத்துடன் துவங்கிய ஊர்வலம் மெயின்ரோடு வழியாக அஞ்சலகம் வழியாக கோவிலை வந்தடைந்தது.

 ஊர்வலத்தில் பக்தர்கள் பால்குடம், தீர்த்தம், அலகு காவடி, கிரேன் காவடி எடுத்து வந்தனர். ஊர்வலத்தை முன்னிட்டு பேருந்துகள் மற்றும் வாகன போக்குவரத்து மாற்றியமைக்கப்பட்டிருந்தது. அன்னதானம் வழங்கப்பட்டது.

Related Stories:

சூலூரில் கலைஞரின் வரும் முன் காப்போம் மருத்துவ முகாம் வால்பாறை, ஜூன் 23: கோடை சீசன் முடிந்தும் வால்பாறைக்கு சுற்றுலா பயணிகளின் வரத்து அதிகளவில் காணப்பட்டது. தேயிலை தோட்டங்களில் நின்று ஆர்வமுடன் போட்டோ எடுத்து மகிழ்ந்தனர். வால்பாறையில் நேற்று சுற்றுலா பயணிகள் வரத்து அதிகரித்து காணப்பட்டது. வால்பாறை பகுதியில் நிலவும் குளு குளு காலநிலை சுற்றுலா பயணிகளை மகிழ்ச்சி அடைய செய்துள்ளது. மேலும், மழை, வெயில், மூடு பனி என ஒவ்வொரு பகுதியிலும் விதவிதமான கால நிலை நிலவுவதால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர். இந்நிலையில், வாட்டர் பால்ஸ் பகுதியில் சாரல் மழை மற்றும் வெயில் நீடிக்கிறது. கவர்கல் பகுதியில் மூடுபனி நிலவியது. வால்பாறை பகுதியில் லேசான சாரல் மழை மற்றும் மேக மூட்டம் நீடித்தது. 3 வகை கால நிலை ஒரு பகுதியில் நிலவுவதால் சுற்றுலா பயணிகள் குதூகலம் அடைந்தனர். மேலும், யானைகள், வரையாடுகள், காட்டு பன்றிகள், மான்கள் என சாலையோரம் வலம் வரும் வன விலங்குகள், புதிய நீர்வீழ்ச்சிகள் சுற்றுலா பயணிகளை உற்சாகப்படுத்தியது. வால்பாறை பூங்கா, படகு இல்லம், கூழாங்கல் ஆறு உள்ளிட்ட பகுதிகளில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகளவில் காணப்பட்டது. வால்பாறையின் முக்கிய சுற்றுலா தலமான நல்லமுடி பூஞ்சோலை பகுதியில் குவிந்த சுற்றுலா பயணிகளால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால், சாலையின் இருபக்கமும் வாகனங்கள் வரிசையாக நின்றது. காவல்துறை மற்றும் வனத்துறையினர் விரைந்து சென்று போக்குவரத்தை சரி செய்தனர். வால்பாறையில் சுற்றுலா பனிகள் கூட்டம் அதிகரித்துள்ளதால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.