கிரீன்லாந்தை கைப்பற்ற அந்நாட்டின் மீது படையெடுக்க மாட்டோம்: அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவிப்பு

 

வாஷிங்டன்: கிரீன்லாந்தை கைப்பற்ற அந்நாட்டின் மீது படையெடுக்க மாட்டோம் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார். கிரீன்லாந்து விவகாரத்தில் ஐரோப்பிய நாடுகள் மீது கூடுதல் வரி விதிக்கப்படும் என்ற முடிவை வாபஸ் பெற்றார் டிரம்ப். கிரீன்லாந்தை வாங்க எதிர்ப்பு தெரிவிக்கும் 8 ஐரோப்பிய நாடுகள் மீது பிப்.1 முதல் 10% வரி அமல் என டிரம்ப் அறிவித்திருந்தார். பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி, சுவீடன், டென்மார்க், பின்லாந்து, நெதர்லாந்து, நார்வே நாடுகளுக்கு 10% வரி என்ற அறிவிப்பு வாபஸ் பெற்றார். ஜூன் 1 முதல் வரி 25 சதவீதமாக உயரும் என்றும் அமெரிக்க அதிபர் டிரம்ப் எச்சரித்திருந்தார்

Related Stories: