திருவள்ளூர்: பூந்தமல்லியை அடுத்த உட்கோட்டை பகுதியில் தனியார் குடோன் உள்ளது. இதில் பிளாஸ்டிக் மற்றும் மரப்பொருள்கள் உள்ளன. இங்கு 50 க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில் ஊழியர்கள் பணியில் ஈடுபட்டிருந்த போது கிடங்கின் ஒரு பகுதியில் தீ விபத்து ஏற்பட்டதால் 50 க்கும் மேற்பட்ட ஊழியர்கள் அலறியடித்துக் கொண்டு வெளியேறினர். இது குறித்து இருங்காட்டுக்கோட்டை தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த 10 க்கும் மேற்பட்ட வீரர்கள் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.