நோபல் பரிசை வழங்குவது அது தொடர்பான சுதந்திரமான குழுதானே தவிர நார்வே அரசு அல்ல: பிரதமர் ஜோனாஸ் கீஹர் விளக்கம்

அமைதிக்கான நோபல் பரிசு ஒரு சுதந்திரமான குழுவால் வழங்கப்படுகிறது, நோர்வே அரசாங்கத்தால் அல்ல என்பதை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பிடம் தாம் தெளிவாக விளக்கியதாக நோர்வே பிரதமர் ஜோனாஸ் கார் ஸ்டோர் தெரிவித்துள்ளார். நோபல் பரிசை நார்வே தனக்கு தராததால் இனி அமைதியை பற்றி கவலைப்பட வேண்டிய கட்டாயமில்லை. கிரீன்லாந்தை ராணுவ நடவடிக்கை மூலம் கைப்பற்றப் போவதாக டிரம்ப் கூறியதற்கு பதிலளிக்கும் விதமாக அவர் இவ்வாறு கூறினார்.

இது தொடர்பாக நோர்வே பிரதமர் ஜோனாஸ் கார் ஸ்டோர் வெளியிட்டுள்ள அறிக்கையில், நார்வே, பின்லாந்து மற்றும் பல நாடுகளுக்கு எதிராக ட்ரம்ப் அறிவித்த வரி உயர்வுகளுக்குத் தாங்கள் எதிர்ப்புத் தெரிவிப்பதாகவும், பதற்றத்தைத் தணிக்க வேண்டும் என்றும் கூறியிருந்தார். நேற்று(19-01-2026) ட்ரம்புடன் தொலைபேசியில் உரையாடத் தானும் ஸ்டப்பும் முன்மொழிந்ததாக ஸ்டோரே கூறினார். ட்ரம்பின் பதில் சிறிது நேரத்திலேயே அனுப்பப்பட்டதாகவும், பின்னர் அமெரிக்க அதிபர் தனது சொந்த விருப்பத்தின் பேரில் அதை மற்ற நேட்டோ தலைவர்களுடன் பகிர்ந்துகொண்டதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

நார்வேயின் நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்திய ஸ்டோரே, கிரீன்லாந்து டென்மார்க் ராஜ்ஜியத்தின் ஒரு பகுதி என்றும், இந்த விஷயத்தில் ஓஸ்லோ டென்மார்க்கிற்கு முழு ஆதரவளிப்பதாகவும் கூறினார். ஆர்க்டிக் பகுதியில் பாதுகாப்பு மற்றும் ஸ்திரத்தன்மையை பொறுப்பான முறையில் வலுப்படுத்துவதற்கான நேட்டோவின் முயற்சிகளுக்கு நார்வே ஆதரவளிப்பதாகவும் அவர் தெரிவித்தார். “நோபல் அமைதிப் பரிசு குறித்து, நன்கு அறியப்பட்ட ஒரு விஷயத்தை நான் அதிப்ர் டிரம்ப் உட்பட அனைவருக்கும் தெளிவாக விளக்கியுள்ளேன். அந்தப் பரிசு நார்வே அரசாங்கத்தால் அல்ல, ஒரு சுதந்திரமான நோபல் குழுவால் வழங்கப்படுகிறது. என்று ஸ்டோரே கூறினார்.

Related Stories: