ஆரணி, ஜன.28: ஆரணி அருகே மணப்பெண் வீட்டில் 14 சவரன் நகைளை மர்ம ஆசாமிகள் திருடிச்சென்றுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அடுத்த வேலப்பாடி கிராமத்தை சேர்ந்தவர் விவசாயி தரணிபாலன்(56). இவரது மனைவி சாந்தி(51), மகன் சந்தோஷ்(23), மகள் சவுமியா(27). இந்நிலையில், சவுமியாவிற்கும் சென்னையை சேர்ந்த கார்த்திகேயன்(29) என்பவருக்கும் சென்னை மடிப்பாக்கத்தில் நேற்று காலை திருமணம் நடந்தது. இதற்காக தரணிபாலன் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் நேற்று முன்தினம் சென்னைக்கு புறப்பட்டு சென்றனர். அங்கு திருமண நிகழ்ச்சிகள் முடிந்ததும், நேற்று மாலை தரணிபாலன் மற்றும் குடும்பத்தினர் மீண்டும் வீட்டிற்கு வந்தனர். அப்போது வீட்டின் முன்பக்க கதவை உடைக்கப்பட் இருந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர்கள் வீட்டின் உள்ளே சென்று பார்த்தனர்.