புதுக்கோட்டை, ஜன. 8: தமிழக அரசு புதிய ஓய்வூதிய திட்டத்தை அறிவித்ததை வரவேற்று புதுக்கோட்டை நெடுஞ்சாலைத்துறை கோட்டப் பொறியாளர் தழிழகன், உதவிக் கோட்டப் பொறியாளர்கள் பரதன், செந்தில்குமார், சரவணன், கோமதி மற்றும் நெடுஞ்சாலைத்துறை பொறியாளர்கள், கண்காணிப்பாளர், கோட்டக்கணக்கர், பணியாளர்கள், ஓட்டுநர்கள் அலுவலக உதவியாளர்கள் ஒருவருக்கொருவர் இனிப்புகளை வழங்கியும் பட்டாசுகள் வெடித்தும், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கும், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கும் நன்றி தெரிவித்தனர்.
