திருவண்ணாமலை, ஜன.26: திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில் வாராந்திர மக்கள் குறைதீர்வு கூட்டம் நடத்த வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்கின்றனர். திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில், வாரந்தோறும் திங்கட்கிழமையன்று நடைபெறும் மக்கள் குறைதீர்வு கூட்டம், கொரோனா பரவல் கட்டுப்பாடு காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் ரத்து செய்யப்பட்டுள்ளது. துமக்கள் தங்கள் கோரிக்கைகளை கலெக்டர் அலுவலகம் மற்றும் தாலுகா அலுவலகங்களில் வைக்கப்பட்டுள்ள பெட்டியில் செலுத்தும் நடைமுறை கடந்த நவம்பர் மாதம் முதல் மாற்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, திருவண்ணாமலை கலெக்டர் அலுவலக நுழைவு வாயில் மற்றும் அனைத்து தாலுகா அலுவலகங்களிலும் நேற்று கோரிக்கை பெட்டி வைக்கப்பட்டது. கலெக்டர் மற்றும் அதிகாரிகளை சந்திந்து நேரில் மனு அளிக்க வந்த பொதுமக்கள், அங்கிருந்த பெட்டியில் மனுக்களை போட்டுவிட்டு ஏமாற்றத்துடன் திரும்பினர்.
கொரோனா கட்டுப்பாடு ஊரடங்கு படிப்படியாக தளர்த்தப்பட்டுள்ளது. கடைகள் திறந்துள்ளன. பஸ் போக்குவரத்து நூறு சதவீதம் இயங்குகிறது. சினிமா தியேட்டர்கள் செயல்படுகின்றன. பள்ளிகளும் படிப்படியாக திறக்கப்பட்டு வருகிறது.