வருசநாடு அம்பேத்கர் காலனியில் அச்சுறுத்தும் ரேஷன் கடை புதிய கட்டிடம் கட்டித்தர கோரிக்கை

வருசநாடு, ஜன. 21: வருசநாடு அம்பேத்கர் காலனியில் உள்ள ரேஷன் கடை இடிந்து விழும் நிலையில் இருப்பதால் ஊழியர்கள், பொதுமக்கள் அச்சமடைந்து–்ளனர். வருசநாடு ஊராட்சியில் உள்ள அம்பேத்கர் காலனியில் 1000க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் உள்ளனர். இங்குள்ள ரேஷன் கடை மூலம் குடும்ப அட்டைதாரர்களுக்கு சீனி, அரிசி, பாமாயில், கோதுமை உள்ளிட்ட அனைத்து பொருட்களும் விநியோகம் செய்யப்படுகிறது. ந்நிலையில், ரேஷன் கடை கட்டிடங்கள் ஆங்காங்கே விரிசல் விழுந்தும், சிலாப்கள் சேதமடைந்தும் உள்ளன.

இதனால் கட்டிடம் எப்போது இடிந்து விழுமோ என்ற பீதியிலே ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். மேலும் பொருட்கள் வாங்க வர பொதுமக்கள் அச்சத்துடன் வர வேண்டிய உள்ளது.  இக்கட்டிடத்தை இடித்துவிட்டு புதிய ரேஷன் கடை கட்டிடம் கட்டித்தர வேண்டும் என சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை மனு கொடுத்தோம். ஆனால் இதுவரை எந்த நடவடிக்கை இல்லை என இப்பகுதி மக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.

இதுகுறித்து சமூக ஆர்வலர் ஆசிரியர் வேல்முருகன் கூறுகையில், ‘அம்பேத்கர் காலனியில் உள்ள ரேஷன் கடை கட்டிடத்தில் சிலாப்கள், கைபிடிகள் சிதிலமடைந்துள்ளன. மழை காலங்களில் மேற்கூரை வழியாக தண்ணீர் கசிந்து ரேஷன் பொருட்கள் நனையும் அவலம் உள்ளது. எனவே, கட்டிடத்தை இடித்துவிட்டு புதிய கடை கட்டித்தர வேண்டும்’ என்றார்.

Related Stories: