ராஜபாளையம் அருகே வேன் மோதி கேமராமேன் பலி

ராஜபாளையம், டிச.15: ராஜபாளையம் தேசிய நெடுஞ்சாலை தென்காசி ரோட்டில், சிவகிரி பகுதியில் ஸ்டுடியோ வைத்து நடத்தி வந்தவர் குருநாதன்(37). இவர் ராஜபாளையத்தில் நடந்த திருமண நிகழ்ச்சியில் புகைப்படம் எடுத்துவிட்டு, தனது டூவீலரில் சிவகிரி நோக்கி திரும்பி கொண்டிருந்தார். அப்போது அரசு மருத்துவமனை அருகே ஐயப்ப பக்தர்கள் சென்ற கார், இவரது டூவீலர் மீது மோதியது.

இதில் நிலைதடுமாறி கீழே விழுந்தார். அப்போது எதிர் திசையில் வேகமாக வந்து கொண்டிருந்த வேன் இவர் மீது மோதியது. இதில் படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார். இது குறித்து தெற்கு காவல் நிலைய போலீசார், வேன் மற்றும் கார் டிரைவர்கள் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Related Stories: