மதுரையில் வரும் 8ம் தேதி மதச்சார்பின்மை தலைப்பில் கருத்தரங்கம்

 

சென்னை: மதுரையில் வரும் 8ம் தேதி மாலை 4 மணிக்கு, பாண்டியன் நகரில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகளின் வழக்கறிஞர் அணி சார்பில் “மதச்சார்பின்மை” என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெறும். இதில் திமுக சார்பில் அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, காங்கிரஸ் கட்சியின் சார்பில் வழக்கறிஞர் ஆர்.மாரியப்பன்-மதிமுக சார்பில் வழக்கறிஞர் இரா.செந்தில் செல்வன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பில் எஸ்.பாரதி-இந்திய கம்யூனிஸ்ட் சார்பில் வழக்கறிஞர் கே.கே.சாமி, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வழக்கறிஞர் த.பார்வேந்தன் ஆகியோர் கருத்துரை வழங்குவார்கள். கருத்தரங்கில் வழக்கறிஞர்கள் தோழர்கள் பெருந்திரளாக கலந்துகொள்ள வேண்டும் என மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகளின் வழக்கறிஞர் அணி அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: