நயினார் நாகேந்திரன் அறிவிப்பு பாஜவில் 6 பேர் கொண்ட ஒழுங்கு நடவடிக்கை குழு

சென்னை: தமிழக பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழக பாஜ கட்சியின் ஒழுங்கு நடவடிக்கை குழு தலைவராக, தமிழக பாஜ துணை தலைவராக பதவி வகித்து வரும் எம்.சக்கரவர்த்தி நியமிக்கப்படுகிறார். இக்குழுவின் உறுப்பினர்களாக எஸ்.ஆர்.சேகர், திருமலைசாமி, சிவகாமி பரமசிவம், குப்புராமு, ராஜலட்சுமி ஆகிய 5 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Related Stories: