கல்லூரி மாணவியை ரயிலில் தள்ளிவிட்டு கொன்ற வழக்கில் குற்றவாளி சதீஷுக்கு தண்டனை குறைப்பு!

 

சென்னை: கல்லூரி மாணவியை ரயிலில் தள்ளிவிட்டு கொன்ற வழக்கில் குற்றவாளி சதீஷுக்கு தண்டனை குறைக்கப்பட்டுள்ளது. சதீஷுக்கு வழங்கப்பட்ட மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்தது சென்னை உயர் நீதிமன்றம். 2024ல் சதீஷுக்கு தூக்கு தண்டனை விதித்து சென்னை மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது. 2022 அக்.13ல் சென்னை பரங்கிமலை ரயில் நிலையத்தில் கல்லூரி மாணவியை தள்ளிவிட்டு சதீஷ் கொலை செய்தார்.

 

Related Stories: