ரவுடி கருக்கா வினோத்துக்கு 10 ஆண்டுகள் சிறை

 

சென்னை: சென்னை கிண்டியில் ஆளுநர் மாளிகை முன் பெட்ரோல் குண்டு வீசிய வழக்கில் கருக்கா வினோத்துக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கடந்த 2023ல் ஆளுநர் மாளிகை முன்பு அடுத்தடுத்து இரண்டு பெட்ரோல் குண்டுகளை ரவுடி கருக்கா வினோத் வீசினார். பெட்ரோல் குண்டு வழக்கு என்.ஐ.ஏ.வுக்கு மாற்றப்பட்ட நிலையில் பூவிருந்தவல்லி நீதிமன்றத்தில் விசாரணை நடந்தது. கருக்கா வினோத்துக்கு 10 ஆண்டுகள், ரூ.5,000 அபராதம் விதித்து பூந்தமல்லி என்.ஐ.ஏ. நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

 

Related Stories: