கோவை,ஜன.5: கோவை மாவட்டத்தில் கடந்த இரண்டு நாட்களாக சாரல் மழை பெய்து வருகிறது. இந்த மழை இன்றும் நீடிக்க வாய்ப்புள்ளது என வேளாண் பல்கலைகழகம் தகவல் தெரிவித்துள்ளது. கோவை உக்கடம், காந்திபுரம், சுந்தராபுரம், துடியலூர், கவுண்டம்பாளையம், பெரியநாயக்கண்பாளையம், பீளமேடு, சிங்காநல்லூர், டவுன்ஹால், செல்வபுரம், சுங்கம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இரண்டு நாட்களாக சாரல் மழை பெய்து வருகிறது. இதனால் மிகவும் குளிரான நிலையே காணப்படுகிறது. வாகன ஒட்டிகள் மழையில் வாகனத்தை இயக்குவதால் மிகவும் அவதியடைந்து வருகின்றனர்.கோவை மாவட்டத்தில் தற்போது பெய்து வரும் மழை வடகிழக்கு பருவமழை தான்.