வேலூர், டிச.31: வேலூரில் 20 சதவீத இட ஒதுக்கீடு கோரி பிடிஓ அலுவலகத்தில் பாமகவினர் நேற்று பிடிஓவிடம் மனு அளித்தனர். தமிழகத்தில் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் வன்னியர் சமூகத்திற்கு 20 சதவீதம் தனி இட ஒதுக்கீடு பாமகவினர் மனு அளித்து வருகின்றனர். இதைதொடர்ந்து, வேலூர் பிடிஓ அலுவலகத்தில் மனு அளிக்க வந்தனர். நேற்று காலை வேலூர் அண்ணா கலையரங்கம் அருகே பாமக சார்பில் பேரணி நடந்தது. இதில் 300க்கும் மேற்பட்ட பாமகவினர் கலந்துகொண்டனர். இந்த பேரணி அருகே உள்ள ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அருகே நிறைவடைந்தது.