திருச்சி, டிச. 29: திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட செயலாளர், முன்னாள் அமைச்சர் பரஞ்சோதி வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி 30 மற்றும் 31ம் தேதிகளில் திருச்சி மாவட்டத்தில் சுற்றுப்பயணம் செய்து தேர்தல் பிரசாரம் செய்ய உள்ளார். இதையடுத்து 30ம் தேதி (நாளை) காலை 11 மணி திருச்சி மாவட்ட எல்லை மேய்க்கன் நாய்க்கன் பட்டியல் வரவேற்பு. 11.30 மணி தொட்டியம் கடைவீதியில் வரவேற்பு நிகழ்ச்சிகளில் முதல்வர் பேசுகிறார். 11.45 மணி தொட்டியம் வாழை, விவசாயிகள், வெற்றிலை விவசாயிகள் சந்திப்பு, பகல் 12 மணி தொட்டியம் வாழை தோட்டம் பார்வையிடுதல், 12.15 மணி சீனிவாசநல்லூர் கிராமத்தில் விவசாயிகளின் வீடுகளுக்கு சென்று சந்தித்தல், 12.30 மணி முசிறி கைகாட்டி வரவேற்பு நிகழ்ச்சியில் முதல்வர் பேசுகிறார். பகல் 1.15 மணி கண்ணனூர் சரஸ்வதி திருமண மண்டபத்தில் விவசாயி தொழிலாளர்கள் சந்திப்பு, 1.30 மணி கண்ணனூர் கடைவீதி பகுதி, 1.40 மணி கொத்தம்பட்டி இந்திராநகர் பகுதி, 1.45 மணி துறையூர் பாலக்கரை சந்திப்பு வரவேற்பு நிகழ்ச்சி, மாலை 3 மணி மண்ணச்சநல்லூர் கடைவீதி வரவேற்பு என நிகழ்ச்சிகளில் முதல்வர் பேசுகிறார். மாலை 3.15 மணி மண்ணச்சநல்லூர் வாணியர் மண்டபத்தில் ரைஸ்மில் அதிபர்கள், தொழிலாளர்கள், பிரதிநிதிகள் சந்திப்பு, மாலை 3.30 மணி நெ.1 டோல்கேட் ரவுண்டானா வரவேற்பு நிகழ்ச்சியில் பேசுகிறார்.