மருத்துவ இடஒதுக்கீட்டிற்கு பிராமணர் சங்கம் வரவேற்பு

வேலூர், டிச. 29: வேலூர் கிளை பிராமணர் சங்கத்தின் புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் சத்துவாச்சாரியில் நடந்தது. இதில் தலைவராக மீனாட்சி சுந்தரம், பொதுச்செயலாளராக சேகர், பொருளாளராக கிருஷ்ணமூர்த்தி, செய்தி தொடர்பாளராக ராஜா, இளைஞரணி செயலாளர்கள் உமாபதி,சிவம், மகளிரணி செயலாளர்கள் ராதாமணி, லலிதா, சுகந்தி உள்ளிட்டோர் புதிதாக தேர்வு செய்யப்பட்டனர்.

தொடர்ந்து, புதிதாக தேர்வு செய்யப்பட்ட நிர்வாகிகளின் பொதுக்கூட்டம் நடந்தது. இதில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீதம் மருத்துவ இட ஒதுக்கீடு வழங்க தமிழக அரசுக்கு பாராட்டு, பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்காக ஹயக்ரீவ ஹோமம் ஆண்டு தோறும் நடத்துவது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

Related Stories: