கஞ்சா விற்ற ஆசாமி கைது

ஸ்ரீபெரும்புதூர்:  ஸ்ரீபெரும்புதூர் அருகே ஒரகடம் அடுத்த, வடக்குப்பட்டு - எழுச்சூர் சாலையில் க ஒரகடம் போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, சந்தேகத்துக்கு இடமாக நின்ற ஆசாமியை, மடக்கி பிடித்து, அவரிடம் இருந்த பையை சோதனை நடத்தினர். அதில் கஞ்சா பொட்டலம் இருந்தது.

இதையடுத்து அவரை காவல் நிலையம் கொண்டு சென்று விசாரித்தபோது,  உத்திரமேரூர் அருகே பெருநகரை சேர்ந்த ராஜன் (எ) முருகன் (45). இப்பகுதியில் கஞ்சா விற்பது தெரிந்தது. இதையடுத்து வழக்குப்பதிந்து அவரை கைது செய்த போலீசார் 1.5 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

Related Stories: