உத்தமபாளையம், டிச. 25: உத்தமபாளையம் எஸ்ஐ முனியம்மாள் தலைமையில், போலீசார் இங்குள்ள அரசு மருத்துவமனை முன்பு வாகனச்சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது டூவீலரில் வந்த வாலிபரை சோதனை செய்தனர். டூவீலரில் 4 கிலோ கஞ்சா இருப்பது தெரியவந்தது. இதனையடுத்து உத்தமபாளையம் காவல் நிலையத்திற்கு போலீசார் சம்பந்தப்பட்ட வாலிபரை அழைத்து சென்று விசாரணை செய்தனர்.