வெள்ள நிவாரண பணியில் சீரமைத்த சாலைகளை அதிகாரிகள் ஆய்வு

சாத்தூர், மே 22: சாத்தூர் பகுதியில் கடந்த வடகிழக்கு பருவ மழையின் போது சேதமடைந்த சாலைகள் புதுபிக்கப்பட்டதை நெடுஞ்சாலை துறையினர் ஆய்வு செய்தனர். சாத்தூர் பகுதியில் நள்ளி, பனையடிப்பட்டி, சிவசங்குபட்டி ஆகிய பகுதியில் உள்ள சாலைகள் கடந்த வடகிழக்கு பருவமழையின் போது பல இடங்களில் அரிப்பு ஏற்பட்டு சேதமடைந்திருந்தது. இந்த சாலைகள் வழியாக செல்லும் வாகனங்கள் மற்றும் பொதுமக்கள் பெரும் சிரமத்தை சந்தித்து வந்தனர்.

பழுதடைந்த சாலைகள் 2023-24ம் ஆண்டுக்கான திட்டப்பணிகள் மற்றும் வெள்ள நிவாரண பணிகள் நிதியில் புதுப்பிக்கப்பட்டன. அவற்றை தமிழ்நாடு அரசு நெடுஞ்சாலை துறை திட்டப்பணிகள் மற்றும் வெள்ளநிவாரணப் பணிகள் கண்காணிப்பு பொறியாளர் ஜெயராணி நேற்று ஆய்வு செய்தார். உடன் விருதுநகர் மாவட்ட கோட்டப் பொறியாளர் பாக்கியலட்சுமி, சாத்தூர் உதவி கோட்டப் பொறியாளர் அனந்தகுமார், உதவிப்பொறியாளர் பொன்முரளி ஆகியோர் இருந்தனர்.

The post வெள்ள நிவாரண பணியில் சீரமைத்த சாலைகளை அதிகாரிகள் ஆய்வு appeared first on Dinakaran.

Related Stories: