சிங்கம்புணரியில் எருதுகட்டு விழா

 

சிங்கம்புணரி, மே 22: சிங்கம்புணரி சந்திவீரன் கூடம் பகுதியில் வைகாசி மற்றும் புரட்டாசி மாதத்தில் எருது கட்டு விழா நடைபெறுவது வழக்கம். விழாவிற்கு என முழு வெள்ளை நிறத்துடன் கண் இமை கால் குழம்பு, வால் முடி என அனைத்தும் வெள்ளை நிறத்தில் இருக்கும் சேவுகப் பெருமாள் கோயில் காளை தேர்வு செய்யப்பட்டு விரைய்யா கோயில் முன்பு கட்டி போடப்பட்டு அவற்றிற்கு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது . பின்னர் காளையின் 4 கால்களிலும் சிலம்பு சலங்கைகள் கட்டப்பட்டு மாடு அவிழ்த்து விட்டது. இதில் 3 சலங்கைகள் அவிழ்ந்து விழுந்தது. இதனால் முப்போகம் விளையும் என விவசாயிகள் மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.

The post சிங்கம்புணரியில் எருதுகட்டு விழா appeared first on Dinakaran.

Related Stories: