சிதம்பரம், டிச. 22: சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆருத்ரா தரிசன விழா கொடியேற்றத்துடன் துவங்கியது. வரும் 30ம் தேதி ஆரூத்ரா தரிசன விழா நடைபெறுகிறது. உலகப் பிரசித்தி பெற்றது சிதம்பரம் நடராஜர் கோயில். பூலோக கைலாயம் என்று அழைக்கப்படும் இந்த கோயிலில் தேரோட்டம் மற்றும் தரிசன விழா மிகவும் பிரசித்தி பெற்றது. ஒவ்வொரு ஆண்டும் ஆனி மாதத்தில் ஆனி திருமஞ்சன திருவிழாவும், மார்கழி மாதத்தில் திருவாதிரை ஆருத்ரா தரிசன விழாவும் நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான மார்கழி மாத ஆருத்ரா தரிசன விழா நேற்று காலை கொடியேற்றத்துடன் துவங்கியது. நடராஜர் கோயிலில் நடராஜர் சன்னதிக்கு எதிரே உள்ள கொடிமரத்தில் உற்சவ ஆச்சாரியார் சர்வேஸ்வர தீட்சிதர் கொடியேற்றி வைத்து சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனை செய்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து
கொண்டனர்.