கிருஷ்ண ஜெயந்தி விழா

செங்கல்பட்டு, ஆக.19:  விஷ்ணு ஆவணி மாதம் அஷ்டமி திதி, ரோகிணி நட்சத்திரத்தில் அவதரித்தார். அந்த தினத்தை கிருஷ்ண ஜெயந்தியாக நாடு முழுவதும் கொண்டாடி மகிழ்கின்றனர். அதன்படி, செங்கல்பட்டு மாவட்டம் அஞ்சூர் தெற்குப்பட்டு பகுதியில் உள்ள ராதா ருக்மணி சமேத  வேணுகோபாலசுவாமி திருக்கோயிலில் கிருஷ்ண ஜெயந்தி விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. கிருஷ்ண ஜெயந்தி விழாவிற்காக,  ராதா ருக்மணி சமேத  வேணுகோபாலசுவாமி கோயிலில் சிறப்பு பூஜைகள் நடந்தன. பின்னர் இரவு 10 மணியளவில்  கிருஷ்ணருக்கு புஷ்ப அலங்காரம் செய்யப்பட்டு மங்கள வாத்தியம், கிருஷ்ண பஜனை முழங்க வாணவேடிக்கையுடன் சுவாமி திருவீதி உலா நடைபெற்றது.

Related Stories: