காஞ்சிபுரம், ஜன.30: காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயிலில் தைப் பூசத்தையொட்டி 3 நாட்கள் நடைபெறும் தெப்போற்சவம் நேற்று தொடங்கியது. காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயிலில் உள்ள சிவகங்கை தீர்த்தம் என அழைக்கப்படும் தெப்பக்குளத்தில் ஆண்டுதோறும் தைப் பூசத்தை முன்னிட்டு, 3 நாட்கள் தெப்போற்சவம் விமரிசையாக நடைபெறும். அதன்படி, நடப்பு ஆண்டுக்கான தெப்போற்சவம் நேற்று ெதாடங்கியது. இதில், இரவு அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில், ஏலவார்குழலி அம்பிகையுடன் மலர் அலங்காரத்தில் எழுந்தருளும் ஏகாம்பரநாதர், தெப்ப குளத்தில் 3 முறை உலா வந்து காட்சியளித்தார். இரண்டாம் நாளான இன்று 5 முறையும், தெப்போற்சவம் நிறைவு நாளான நாளை 7 முறையும் உலா வருகிறார். ேநற்று ஏகாம்பரநாதர் கோயில் ஏலவார்குழலி அம்மன் ஹாய் யுவர் தப்ப உற்சவத்தில் வீதிஉலா வர, ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவிற்கான ஏற்பாடுகளை கோயில் நிர்வாகத்தினர் மற்றும் விழா குழுவினர் செய்துள்ளனர்.
காஞ்சி ஏகாம்பரநாதர் கோயில் தெப்போற்சவம்
- காஞ்சி ஏகாம்பரநாதர் கோவில் தெப்போத்ஸவம்
- காஞ்சிபுரம்
- -தெப்போத்சவம் நாள்
- தாய் பூசா
- காஞ்சிபுரம் ஏகம்பரநாதர் கோயில்
- சிவகங்கை
- தீர்த்தம்
