சென்னை: அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கடந்த 7.7.2025 முதல் சட்டமன்ற தொகுதி வாரியாக தொடர் பிரச்சார சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில், எடப்பாடி பழனிசாமி 23.8.2025 வரை தொடர் பிரச்சாரம் செய்திடும் வகையில் அறிவிக்கப்பட்டிருந்த மூன்றாம் கட்ட சுற்றுப்பயண திட்டத்தில் 23.8.2025 (சனிக்கிழமை) சோழிங்கநல்லூர், திருப்போரூர் ஆகிய சட்டமன்ற தொகுதிகளில் மேற்கொள்ள இருந்த சுற்றுப்பயண திட்டம் ஒத்திவைக்கப்படுகிறது என அதிமுக தலைமை கழகம் தெரிவித்துள்ளது.
