விழுப்புரம், டிச. 4: விழுப்புரம் அருகே அரசு பஸ்சில் பயணம் செய்த மூதாட்டியிடம் 23 பவுன் நகையை திருடிச் சென்ற பெண்ணை போலீசார் தேடி வருகின்றனர். விழுப்புரம் அடுத்த கண்டாச்சிபுரம் கலந்தல் கிராமத்தை சேர்ந்தவர் கோவிந்தராஜ். இவரது மனைவி விஜயலட்சுமி (62). இவர் கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு சென்னையில் உள்ள உறவினர் வீட்டு திருமண நிகழ்ச்சிக்கு சென்றுவிட்டு டிசம்பர் 2ம் தேதி 7 மணியளவில் சென்னையில் இருந்து விழுப்புரம் செல்லும் அரசு பஸ்சில் வீடு திரும்பியுள்ளார். அப்போது திருமண நிகழ்ச்சிக்காக அணிந்திருந்த 23 பவுன் நகைகளை ஒரு சிறிய பெட்டியில் பாதுகாப்பாக வைத்து அந்த பெட்டியை ஒரு பையில் வைத்துக்கொண்டு பேருந்தில் பயணம் செய்துள்ளார். இந்நிலையில் பஸ், விழுப்புரம் புதிய பஸ் நிலையத்துக்கு சுமார் 10.30 மணியளவில் வந்தடைந்தது. விஜயலட்சுமி பஸ்சிலிருந்து இறங்கும் போது அருகில் சென்னையிலிருந்து உடன் பயணம் செய்த சுமார் 40 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் விஜயலட்சுமி நகை வைத்திருந்த பையை எடுத்துக்கொண்டு அவசர அவசரமாக பஸ்சிலிருந்து கீழே இறங்கியுள்ளார்.