டூவீலர் விபத்தில் பெண் பலி

காரைக்குடி, பிப் 25: காரைக்குடி அருகே அமராவதிபுதூர் தேவகோட்டை சாலையில் தேவகோட்டையைச் சேர்ந்தவர் ராஜலட்சுமி(40). இவர், அதே ஊரைச் சேர்ந்த ராஜ்குமார்(39) என்பவருடன் காரைக்குடிக்கு டூவீலரில் வந்துள்ளார். அப்போது அமராவதி புதூர் அருகே நான்கு வழிச்சாலை பணிக்காக தோண்டப்பட்ட  பள்ளத்தில் பைக் தடுமாறி விழுந்ததில் இருவருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது. காரைக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி ராஜலெட்சுமி உயிரிழந்தார். ராஜ்குமார் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டார். சோமநாதபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

Related Stories: