மாவட்ட அளவில் நடைபெற்ற கபடி போட்டியில் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் முதலிடம் கல்வி மாவட்ட அலுவலர் பாராட்டு

செய்யாறு, ஜன.29: மாவட்ட அளவில் நடைபெற்ற கபடி போட்டியில் முதலிடம் பெற்ற அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவர்களை கல்வி மாவட்ட அலுவலர் பாராட்டினார். திருவண்ணாமலை மாவட்ட அளவிலான பல்வேறு போட்டிகள் நேற்று முன்தினம் நடந்தன. திருவண்ணாமலை மாவட்ட விளையாட்டு அரங்கில் 27ம் தேதி நடைபெற்ற 19 வயதுக்குட்பட்ட மாணவர்களுக்கான கபடி போட்டியில் செய்யாறு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் பங்கேற்று முதல் இடம் பெற்றனர். மேலும், இறகுப்பந்து போட்டியில் ஒற்றையர் மற்றும் இரட்டையர் பிரிவில் முதலிடம் பெற்று சாதனை படைத்தனர். சாதனை படைத்த மாணவர்களையும், பயிற்சி அளித்த உடற்கல்வி இயக்குனர் வே.சூரியநாராயணன், உடற்கல்வி ஆசிரியர்கள்              பி.சரவணன், ரகுராமன் மற்றும் முதுகலை ஆசிரியர் வீ.வரதன் ஆகியோரை கல்வி மாவட்ட அலுவலர் (பொறுப்பு) எம்.எஸ்.சுகானந்தம், பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் ஆர்.கே.மெய்யப்பன், தலைமை ஆசிரியர் (பொறுப்பு) எல்.முரளி ஆகியோர் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.

Related Stories: